சம்பூரில் 24 மீனவர்கள் கடற்படையினரால் கைது!

breaking
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்கரை சேனை கடற் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 24 மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள். 14.05.19 அன்று ஸ்ரீலங்கா கடற்படையினர் சம்பூர் கடற்கரை சேனை கடற்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டவேளை தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 24 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்து கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.