வடக்கில் பாடசாலைகளின் பாதுகாப்பில் சிவில் பாதுகாப்பு படையினர்!

breaking
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைத் தொடர்ந்து வடக்கில் உள்ள 102 பாடசாலைகளில் 200க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மன்னார்,வவுனியா மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் சிவில் பாதுகாப்பு படையினரை பாடசாலைகளின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோதனைச் சாவடிகளிலும் ஆண் பெண்கள் என்ற வித்தியாசமின்றி சிவில் பாதுகாப்பு படையினர் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் முன்னாள் போராளிகளே பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.