முள்ளியவளை பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!

breaking
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் முஸ்லீம் அடிப்படை வாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் நீராவிப்பிட்டியினை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று14.05.19 அன்று இரவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் விவசாய பண்ணை ஒன்றினை நடத்திவரும் முஸ்லீம் நபர் ஒருவரின் விவசாய பண்ணையினை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டுள்ளார்கள்.
இதன் போது எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் நீராவிப்பிடிட்டியினை முகவரியாக கொண்ட விவசாய பண்ணையின் நபரினை முஸ்லீம் அடிப்படை வாதகுழுக்குளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது