முல்லைத்தீவில் இருந்து காத்தான்குடி வியாபாரிகள் வெளியேற்ற வேண்டும் தீர்மானம்!

breaking
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காத்தான் குடியினை சேர்ந்த வியாபாரிகளை வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானம் ஒன்று நேற்று 16.05.19 அன்று சபையின் அமர்வில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிமாவட்டத்தில் இருந்து குறிப்பாக மட்டக்களப்பு காத்தான் குடியில் இருந்து வந்து பலர் கடைகளை ஆரம்பித்துள்ளார்கள்
அவர்கள் என்ன விதத்தில் வந்துள்ளார்கள் இதேபோல் வடக்கில் தமிழ் மக்கள் காத்தான் குடியில் போய் கடை நடத்த அவர்கள் இடம் தரப்போவதும் இல்லை
இன்னிலையில் அப்படிப்பட்டவர்களை இந்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் தீர்மனம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்துள்ளார்.