அலறும் சிங்கள தேசம்! - தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதலின் எதிரொலி

breaking

நேற்று மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில்    தமிழீழம் சைபர் போஸ் எனும் குழுவினரால் விமான நிலையம் மற்றும் சிறிலங்கா அரசு தூதரகங்கள் மற்றும் சில தனியார் தளங்கள் தாக்கப்ட்டிருந்தன.

இந்த நிலையில் சிறிலங்கா எங்கும் இந்த செய்தி பலத்த அதிர்வினை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறிலங்காவில் விமானப்படையின் சைபர் குழு அவசர அவசரமாக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை முழுவதும் கணனிகளையும் தகவல் தொடர்பாடல் சாதனங்களையும் பாதுகாப்பாக பேணுமாறு சிறிலங்கா விமானப்படையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி கடந்த இரண்டு வருடங்களாக தமிழீழம் சைபர் போஸ் குழுவினர் இந்த வகையான தாக்குதலை தொடுத்துள்ளது மட்டுமின்றி. கடந்த வருடம் சிறிலங்கா இராணுவத்தினரின் புதிய படைப்பிரிவாக ஒரு சைபர் படையணியும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இவ்வாறனா தாக்குதல்களை தாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள என்ற சிறிலங்கா இராணுவத்தினரின் மூக்கை உடைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள் : சிறிலங்கா விமான நிலைய திரைகளில் பறந்த தமிழீழ தேசியக்கொடி !!  சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் ! – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்