ஸ்காட்லாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு.!

breaking
18.05.2019 அன்று Scotland இன் Glasgow நகரில் முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இவ் எழுச்சி நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்பு முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்ட எம் சொந்தங்களை நினைத்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் தேசியக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு அமைதிவழிப் போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.