மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

breaking
வடதமிழீழம்  முல்லைத்தீவு மாங்குளம் இரண்டாம் ஒழுங்கை புதிய கொலனி பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய  மங்ககநாதன் மகேஸ்வரன் என்கின்ற நபருடைய சடலம் இன்று காலை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டு உள்ளது. வீட்டில் நேற்றைய தினம் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் குறித்த நபர் இருந்ததாகவும் இன்று 19.05.19 அதிகாலை அவருடைய மகன் வீட்டில் சென்றபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது, சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய தொடர்ந்து மாங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உடலம் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.