ஒருதொகை கற்றாழை மரக் கன்றுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை, கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (18) கைதுசெய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் பிடுங்கப்பட்ட கற்றாழை மரக் கன்றுகளை லொறியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்றபோதே, இச்சந்தேக நபர்களை வங்காலை பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைதுசெய்துள்ளனர்.
வங்காலை காட்டுப்பகுதியில் பிடுங்கப்பட்ட இக்கற்றாழை மரக் கன்றுகள் 18 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், சுமார் 510 கிலோகிராம் நிறையுடையாக இக்கற்றாழை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது