இன்று மறக்க முடியாத மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும், தமிழீழ மண்ணில் அவர் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்று கூறிப்பிடலாம். தமிழரின் வீரத்தினை உலகறிய வைத்தவர் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதியாக மிளிர்ந்தார். போர்த் தளபாடங்கள், ஆட்பல வளங்கள், வல்லாதிக்க அரசுகளின் உதவிகளுடன் பல மாதங்கள் போராடிக் கைப்பற்றிய நிலங்களை சில நாட்களுக்குள் கைப்பற்றி, முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ஐந்தாயிரத்திற்கும் குறைவான போராளிகளைப் பயன்படுத்தி அவர்களை எதிர்கொண்டு போரிட்டு துரைத்தியடித்த பிரிகேடியர் பால்ராஜை உலகமகா வீரன் என்று கூறினால் அது மிகையாகாது.