பட்டாசு வெடித்தது, பதறிய மக்கள், விரைந்த ஶ்ரீலங்கா ஆக்கிரமிப்பு கடற்படை
வடதமிழீழம்: மன்னார் நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தில் நேற்றிரவு வெடிச் சச்தம் கேட்டதால், அந்தப் பகுதி மக்கள் சிறிது நேரம் பதற்றமடைந்தனர்.
அச்சங்குளம் விளையாட்டு மைதானத்தின் அருகில் காணப்படும் பாழடைந்த வீடொன்றில் இருந்து வெடிச் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக அச்சங்குளம் கடற்படையினர், முருங்கன் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பட்டாசு வீட்டுக்குள் வெடித்தபடியால் அழுத்தம் அதிகமாகி பெரும் சத்தம் கேட்டத எனத் தெரிவிக்கப்படுகிறது.