முரண்பட்டவர்களின் வானில் குண்டை வைத்தெடுத்து கைது செய்த ஶ்ரீலங்கா காவல்துறை

breaking
[caption id="attachment_69931" align="alignright" width="300"] சித்தரிப்புப் படம்[/caption] வடதமிழீழ பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலத்திற்க்குச் சென்றவர்களை பொய் குற்றச்சாட்டில் காவல்துறை  கைது செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு . யாழ்,வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் காவல்துறையினருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே ஏற்ப்பட்ட வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் காவல்துறையினர் குறித்த வானில் குண்டை வைத்து விட்டு குண்டு வைத்திருந்ததாக சோடிக்கப்பட்ட பொய் குற்றச் சாட்டின் கீழ் குறித்த ஐவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் காவல்துறையினர் மீது குற்றம் சுமத்துகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.