முல்லையில் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த ஆளுனர்!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. போருக்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சரஸ்வதி மோகன்தாஸ், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.