சட்டவிரோதமான முறையில் 28 கடவுச்சீட்டுக்களை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதுடைய மொஹமட் ஜவான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்