நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கன்னியாகுமரியில் பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் - காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலையில் உள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், காலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு ஓரத்தில் தனியாக அமர்ந்து, தேர்தல் நிலவரங்களைத் தனது மொபைலில் பார்த்துவருகிறார்.
கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரை இரண்டாவது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார், சுமார் 50,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வசந்தகுமார் முன்னிலையில் இருப்பதால், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றிவாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.