முகத்தை அழகாக்க போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஒருவர் கைது

breaking
போலியாகத் தயாரிக்கப்பட்ட முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்களையும் (Face Whitening Cream), அவைகளைப் பொதி செய்யப் பயன்படுத்தப்பட்ட பெட்டிகள், ஸ்டிக்கர்களையும் நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேற்று (26) கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் காவல்துறை பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நீர்கொழும்பு அங்குருகாரமுள்ள பிரதேச வீடு ஒன்றைச் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டபோது அங்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் முகத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் (Face Whiting Cream) உட்பட அவைகளைப் பொதி செய்யப் பயன்படுத்தப்பட்ட பெட்டிகள் , ஸ்டிக்கர்கள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன