வவுனியாவில் தமிழர் புனர்வாழ்வு கழக் ஆவணக்கள் மீட்பு!

breaking
வவுனியா மரக்காரம்பளைப்பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றில் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருள்கள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டில் இன்று காலை சோதனை மேற்கொண்டனர். அங்கு கைவிட்ப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக்கட்டமையின் கீழ் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பன மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.