முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த ராதிகா!

breaking
விளையாட்டு அமைச்சால் நடத்தப்பட்ட தேசிய ரீதியான சைக்கிள் ஓட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை நந்தீஸ்வரன் றாதிகா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ மீற்றர் தூர சைக்கிள் ஓட்டப் போட்டியில் வடமாகாணம் சார்பாக பங்குபற்றிய நந்தீஸ்வரன் ராதிகா வௌ்ளி பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். இந்தப் போட்டியில் 3 ஆம் இடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்திரஜித் தமிழரசி பெற்றுக் கெண்டார்.