போதையில் வெறியாட்டம் ஆடிய பிக்குகள்!

breaking
மது போதையில் முறையற்று செயற்பட்ட பிக்குகள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்காவின் மினுவாங்கொடை, புலுகஹமுல்ல பிரதேசத்தில், குடித்துவிட்டு பிரதேசத்தில் முறையற்று நடந்த இரு பிக்குகள் பிரதேசவாசிகளால் மினுவாங்கொடை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை (22) இடம்பெற்ற இச் சம்பவத்தை அடுத்து, குறித்த பிக்குகள் இருவரும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் எச்சரிக்கை விடுத்த நீதவான் கேசர சமரதிவாகர, தலா ரூபா 1,000 வீதம் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.