வடதமிழீழம்: சாவகச்சேரி பொதுச்சந்தையை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் இடம்பெறுகிறது. சாவகச்சேரி பொதுச்சந்தையின் வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, வியாபாரிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் வியாபாரிகளிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் தெழிவூட்டல் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.