மாங்குளத்தில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ரௌடிகள்

breaking
  வடதமிழீழம்: முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் ரௌடிக்குழு ஒன்று வீடு புகுந்து காட்டுமிராண்டித்தனமாக நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்தனர். வீட்டிலிருந்த பொருட்களை அடித்துடைத்து, பெறுமதியான பொட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நேற்று (28) இந்த சம்பவம் நடந்தது. மாங்குளம் புதிய கொலனியில் வீடொன்றுக்குள் வாள், கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ரௌடிகள் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கினர். வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்துடைத்து சேதமாக்கியுள்ளனர். வீட்டிலிருந்த பொருட்கள் சிலவற்றையும் ரௌடிகள் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரண்டு பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனிப்பட்ட முரண்பாடு ஒன்றையடுத்தே இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.