அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையை குறைசொல்லும் சர்வதேச மன்னிப்பு சபை

breaking
  அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பலவீனமானவையாகவும்,தவறான எண்ணத்தை தோற்றுவிப்பவையாகவும் இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறை கூறியிருக்கின்றது. இலங்கையின் மனித உரிமை நிலவரத்தில் மேம்பாடு ஏற்பட்டிருப்பதாக எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடிய வகையில் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருக்கின்றது என்று கூறியிருக்கும் மன்னிப்புச் சபை கடந்த வருடம் இலங்கையில் சில அத்துமீறல்கள் (சட்ட விரோத கொலைகள் , சித்திரவதைகள், அடாத்தன தடுப்பு காவல் ,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படல் உட்பட ) இடம்பெற்றதாகவும் , போர்க்காலத்தில் உரிமை மீறல்களையும், துஷ்பிரயோகங்களையும் செய்தவர்கள் சட்டத்தில் சிக்காமல் இருக்கும் போக்கு இன்னமும் தொடர்கிறது என்றும் அறிக்கை கூறியிருக்கிறது சுட்டிக்காட்டிருக்கிறது. அதேவேளை அரசாங்க படைகள் அத்து மீறல்களை செய்துவிட்டு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக செயற்படுகின்ற போக்கு பற்றிய உண்மை நிலை குறைத்து கூறப்பட்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.