ஶ்ரீலங்கா நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரிடம் துப்பாக்கி ரவைகள்

breaking
  ஶ்ரீலங்கா: மல்வானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு தொகை ரவைகளுடன், ஶ்ரீலங்கா நிதி அமைச்சின் ஊடகப்பிரிவுப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து இன்று (29ஆம் திகதி) முற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 93 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.