மூடப்பட்ட குழியிலிருந்த பெருமளவு வெடிபொருட்கள்!

breaking
தனமல்விலைப் பகுதியின் குமாரகம சந்திக்கருகாமையிலுள்ள காணியொன்றில் மூடப்பட்ட குழியொன்றிலிருந்து வெடிமருந்துகள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட பொதியில் டெட்டனேட்டர்கள் ,கைகுண்டுகள் 195 அமோனியம் னைட்டிரேட் 250 கிராம் பிளக் பவுடர் 50 கிராம், டி. 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் சன்னங்கள் ஐந்து உள்ளிட்டு பெருந்தொகையிலான இரும்புத் தூள்கள் என்பன இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.