கத்திக்குத்திற்கு இலக்கானவர் மருத்துவமனையில்!

breaking
விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டம் விசுமடு மாணிக்கபுரம் பகுதியில் 31.05.19 அன்று இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்கத்தின் பின்னர் அது கத்திக்குத்தாக மாறியுள்ளது.
இதன்போது மாணிக்கபுரத்தினை சேர்ந்த 35 அகவையுடை போல் கலிஸ்ரன் என்ற குடும்பஸ்தர் முகத்தில் வயிற்றில் காயடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.