கொழும்பில் இராணுவ அதிகாரி போன்று வந்த தீவிரவாதி அதிரடியாக கைது!

breaking
இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட சந்தேகநபர் ஒருவர்  சிறிலங்கா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுர பகுதியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ அதிகாரி போன்று உடையணிந்து செயற்பட்டு வந்த முஹம்மட் நிசார் இம்ரான் எனும் சந்தேகநபரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறிலங்கா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.