தியாகி பொன்.சிவகுமாரன் 45வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

breaking
தியாகி பொன்சிவகுமாரன் அவர்களது 45வது ஆண்டு நினைவாக யூன்-6 மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு ஜேர்மன் தமிழ் இளையோர்களின் ஒழுங்கமைப்பில் அங்குள்ள சிறார்களினால் பொதிசெய்யப்பட்ட உபகரணங்கள் விளையாட்டுப்பொருட்கள் இனிப்புக்கள் என்பன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டு த்துறையூடாக வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன்,வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினர் திரு.தி.விஜீகரன், புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகத்தலைவர் திரு.அமிர்தராஜ், முன்னணியின் பழையவாடி செயற்பாட்டாளர் திரு.அகிலேஸ், முத்துமாரி நகர் செயற்பாட்டாளர் திருமதி.சித்திராதேவி ஆகியோர் கலந்து கொண்டு சிறார்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்கள். மேற்படி நிகழ்வில் புதூர், பரிசன்குளம், முத்துமாரி நகர், புளியங்குளம் தெற்கு, இராமனூர் ஆகிய முன்பள்ளிகளின் மாணவர்கள் மறனறும் ஆசிரியர்கள், சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். மேற்படி உதவிக்காக ஜேர்மன் இளையோர் அமைப்பினருக்கு குழந்தைகளுக்கும் நன்றிகளைத்தெரிவிப்பதுடன் மகத்தான பணிக்காக தலைவணங்குகிறோம்.