லண்டனில் இந்தியர்களுடன் சிக்கிய விஜய் மல்லையா! - மைதானத்தில் பரபரப்பு!

breaking

லண்டனில் கிரிக்கெட் போட்டியினை பார்த்து விட்டு அரங்கினை விட்டு வெளியேறிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, திருடன் என அரங்கிலிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் கோஷமிட்டமையினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதின.

இதன்போது குறித்த போட்டியை பார்த்து விட்டு, கிரிக்கெட் அரங்கிலிருந்த வெளியேற முற்பட்ட விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட இந்திய ரசிகர்கள், திருடன் எனக்கூறி கோஷமிட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகளின் உதவியுடன் அவ்விடத்திலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.