பொக்கணைப்பகுதியில் தமிழன் குண்டு மீட்பு!

breaking
முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பொக்கணைப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பொக்கணைப்பகுதிகுதியில் 11.06.19 அன்றுகாணியினை துப்பரவு செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதையுண்ட நிலையில் இரண்டு தமிழன் குண்டுகள் காணப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் குறித்த இடத்தில் உள்ள தமிழன் குண்டினை அடையாளப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்