பிடிபட்டார் சஹ்ரானின் ஒருங்கிணைப்பாளர் .!

breaking
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்கொலைதாரியும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் ஷாசீமினின் குருநாகல் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர்,  சிங்கள  பொலிஸ் குழுவினரால் கட்டுப்பொத்த நாரம்மலவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முஹமட் அரோஷ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.