கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவி

breaking
  ஶ்ரீலங்கா: களனி பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் கூரிய ஆயுதம் ஒன்றினால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (வயாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காதல் பிரச்சினை காரணமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்