தற்கொலைதாரியின் வீட்டிலிருந்து அரபுமொழி பாடசாலை தொடர்பான விண்ணப்பங்கள்

breaking
  ஶ்ரீலங்கா: கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியின் வீட்டிலிருந்து அரபுமொழி பாடசாலை தொடர்பான விண்ணப்பங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் அஸாம் மொஹமட் முபாரஹ் அலியாஸ் அப்துல்லாஹ் என்பவரால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த குண்டுதாரியின் கொலன்னாவை வீட்டிலிருந்து சில முக்கியமான ஆவணங்களை மீட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர். இதன்படி மேற்படி வீட்டில் மீட்க்கப்பட்ட ஆவணங்களில் ஒன்று இலங்கையில் ஒரு புதிய அரபு மொழி பாடசாலையை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப்படிவமாகும். அந்த விண்ணப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இமூரா லெப்பை மொஹமட் ஸாஜித் என்பவரின் கையொப்பம் இடப்பட்டிருந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்தரமுல்லை மற்றும் நிந்தவூர் பகுதிகளில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் நுவரெலியா பகுதயில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது