இரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்!

breaking
ஆபத்தான இரசாயன பதாா்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டிருப்பதாக ஊடக பேச்சாளா் ருவான் குணசேகர கூறியுள்ளாா். புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள தேயிலை உற்பத்தி நிலையம் ஒன்றில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட சுமார் 178 கிரோகிராம் தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.