முல்லைத்தீவு செல்வபுரத்தில் பற்றி எரிந்த பனங்கூடல்கள்!

breaking
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இன்று 13.06.19  மக்கள் குடியிருப்புக்கு அண்மையில் பனங்கூடலில் ஏற்பட்ட தீ பரவியதில் அதிகளவான பனைமரங்கள் எரிந்துள்ளதுடன் மக்கள் உபகரண பொருட்கள் சிலவும் எரிந்து சேதமடைந்துள்ளன.
செல்வபுரம் மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள பனங்கூடலுக்குள் திடீரென பற்றிய தீ பனங்கூடல் முழுதும் பரவியுள்ளது.
இன்னிலையில் இந்த தீவிபத்து தொடர்பில் அருகில் உள்ள மக்கள் பொலீசார் மற்றும் படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் மற்றம் பொலீசார் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உழியர்கள் மற்றம் மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தீயினை தண்ணீர் பாச்சி அணைத்துள்ளதுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக பனைமரக்கூடல்கள் அடிக்கடி தீபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.