கிளிநொச்சியில் இருந்து கேராளா கஞ்சா கடத்தல் 4 பேர் கைது!

breaking
ஆறு கிலோ கிராம் கேளர கஞ்சாவை வேன் ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து மாத்தளை நோக்கி இந்த கேரள கஞ்சா தொகை கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மிகிந்தலை காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய வீதி சோதனை சாவடியை பயன்படுத்தி நேற்று இரவு1.06.19 குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், மிகிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.