தமிழர்களின் எல்லை கிராமங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மயமாக்கல்!

breaking
போரிற்கு பின்னர் தமிழர் தாயகத்தினை துண்டாட நினைக்கும் சிங்கள ஆதிக்கம் அதற்கான வேலையினை மேற்கொண்டு வருகின்றது. சம்மந்தனின் கோட்டையாக விளங்கும் திருகோணலையில் பறிபோய்க்கொண்டிருக்கும் தமிழர்களின் நிலங்கள் பற்றி கூட்டமைப்பினர் கண்டுகொண்டதாக இல்லை அரசாங்கத்திற்கு எப்போதும் பச்சைக்கொடி காட்டிக்கொண்டே அவர்கள் இருப்பார்கள் இதற்காகவே மக்கள் அவர்களை தெரிவுசெய்துவிட்டார்களா என சிங்களவர்களின் நில,மத அபகரிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுக்கியுள்ளார்கள்.   யுத்தத்திற்கு பின்னர் சிங்கள காலனித்துவ மற்றும் சிங்கள பௌத்தமயமாக்களை எதிர்கொள்ளும் பகுதிகளில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னைமரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமம் முக்கியமானதாகும் இந்த பிரதேசம் பூகோள ரீதியில் வடக்கு கிழக்குக்கு மாகாணங்களுக்கு இடையான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில அமைந்து இருக்கிறது. இந்த பகுதி இரண்டு முனைகளிலில் அபகரிக்கப்படுகிறது , முனை 1 : மேற்கு பகுதியில் பனிக்கன்குளம் வயல் முனை 2: கிழக்கில் இருந்து கந்தசாமி மலை
2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சிங்கபுர குடியேற்ற சிங்கள மக்கள் பனிக்கன்குளம் வயல் பகுதியில் தமிழர்களின் காணிகளை அபகரித்து விவசாயம் செய்து வருகிறார்கள் . இவர்கள் தெற்கில் இருந்து ஊர்க்காவல் படை என்கிற பெயரில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் என சொல்லப்படுகிறது . குறைந்த பட்சம் இந்த பகுதியில் இந்த சிங்களவர்கள் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து இருப்பதாக சொல்லுகிறார்கள் . இதுமட்டுமல்லாது இப்போது இந்த பகுதியில் 4 ஏக்கர் காணியில் புத்த கோவில் ஒன்றை கட்ட முயற்சிக்கிறார்கள் மறுபுறம் கந்தசாமி மலை பகுதி தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த பகுதியில் இப்போது ஒரு பௌத்த பன்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட தன் பிற்பாடு அந்த பகுதியில் உள்ள கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது இந் நிலையில் கடந்த சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மலையடிவாரத்திலேயே இருந்த மரத்தடியில் மக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொண்டு இருந்தார்கள் இவற்றை எல்லாம் தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்பவர்கள் கண்டுகொள்வார்களா அல்லது கண்டும் காணாமல் போவார்களா இந்த நிலை தொடருமானால் தமிழர்கள் கூறுபோடப்பட்டு விடுவார்கள் இதற்கும் கூட்டமைப்பே முழுமையாக காரணமாக அமையும் என்பது உண்மை