அதிபர் இல்லாது இயங்கும் பாடசாலை!

breaking
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் பாரதி மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அதிபர் இல்லாமல் இயக்குவதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறித்த பாடசாலைக்கு அதிபர் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 950 மாணவர்கள் கல்வி கற்றுவரும் குறித்த பாடசாலையில் 48 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். எனினும் அதிபர் எவரும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.