ஆவா குழுவை சந்திக்க தாம் தயார் என, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.