வவுணதீவு கொலை சம்பவம் சவூதியில் ஐவர் கைது கொழும்பிற்கு அழைப்பு!

breaking
மட்டக்களப்பு-வவுணதீவு பகுதியில், கடமையில் இருந்த பொலிஸார் இருவ​ர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட  ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தௌஹித் ஜம்ஆத் அமைப்பை சேர்ந்த, குறித்த ஐவரும், சவூதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக, கடந்த 11 ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சவூதி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களை இன்று அதிகாலை கொழும்பிற்கு விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்