ஸ்ரீலங்காவில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

breaking
பன்னல-இரபடகம பகுதியிலுள்ள ஆடைத்  தொழிற்சாலை ஒன்றில், இன்று (14) அதிகாலை தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. சிலாபம், குருநாகல் பகுதிகளில் உள்ள தீயணைப்புப் பிரிவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.