யாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு - காணொளி இணைப்பு.!

breaking
வட தமிழீழம் இ யாழ்.நகர் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறை இணைந்து மீட்டிருக்கின்றனர் https://www.facebook.com/thaarakammedia/videos/493552731416817/ இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடாத்தியிருந்தனர். இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை காவல்துறையினர் மீட்டிருக்கின்றனா். இதனுள் டெட்டனேட்டா்கள்இ சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது.