வவுனியாவில் பொலீசாரின் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு சென்ற வெளிநாட்டு அகதிகள்!

breaking
வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகள் இன்று பொலீசாரின் பாதுகாப்புடன் வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கா அழைத்துசெல்லப்பட்டுள்ளார்கள். கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து தெற்கில் உள்ள ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 பேர் வரையிலானோர் சிக்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். சவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர் இதன்போது பொலீசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.