மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 5 பொலிஸார் உயிரிழப்பு!

breaking
ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 5 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஜாம்ஷெட்பூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சராய்கேலா மாவட்டத்துக்குட்பட்ட பிரபல சந்தை பகுதியில் இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐந்து பொலிஸார் உயிரிழந்ததோடு, சிலர் காயமடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டைகளிலும் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரும் உள்ளூர் பொலிஸாரும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.