கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.20 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சன்ஹில் ஹோட்டலுக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலுடனேயே குறித்த மூவரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.