அனுராதபுரத்தில் பலத்த பாதுகாப்பு

breaking
பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் – மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிங்கள பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அனுராதபுரம் நகரத்தில் 20 இடங்களில் வாகனத் தரிப்பிற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்துன. மேலும் மிஹிந்தலை நகரத்திலும் இவ்வாறு 6 இடங்களில் வாகனத் தரிப்பிற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈபட்டுள்ளனர்.