சோமாலியா நாடாளுமன்றம் அருகே கார் குண்டுத் தாக்குதல்.!

breaking
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள நாடாளுமன்றம் அருகே  ஏற்று சனிக்கிழமை) கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த 12 பேரும் சோமாலியா அருகாமையில் உள்ள கென்யா நாட்டை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது. அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.