மணல் அகழ்வைத் தடுக்க ஒரு சில பொதுமக்கள் முன்வருகின்ற போதிலும், கடத்தல் காரர்களுக்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் ஒத்துழைப்பதால் மணல் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சாவகச்சேரி காவல் நிலைய தலைமைப்பீட பொறுப்பதிகாரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
பேரினவாத ஶ்ரீலங்கா அரசின் காவல்துறையினரே கையூட்டுப் பெற்றுக்கொண்டு மணல் மாபியாக்களுடன் சேர்ந்து இயங்குகிறார்கள் என்பது தமிழ் மக்களிற்கு தெரிந்த உண்மை அதை மறைக்க முடியாது