ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பங்குபற்றியோருக்கு தண்ணீர் வசதி செய்யப்படவில்லை
வடதமிழீழம்: யாழ்ப்பாணம் தென்மராட்சி் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.
முற்பகல் 10.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி 1.00 மணிவரை நடைபெற்ற போதிலும் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கப்படவில்லை என்று அங்கு விசனம் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இந்த நிலமை ஏற்பட்டது.