வவுணதீவில் வீசிய காற்று 20 வீடுகள் தூக்கிவீசப்பட்டன!

breaking
தென்தமிழீழம் மட்டக்களப்பில் வவுணதீவு பகுதியை நேற்று 16.06.19 ஊடறுத்து வீசிய சுழற் காற்றினால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை மற்றும் இலுப்பட்டிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளது. இதில் சுமார் 20 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவத்தினை தொடர்ந்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைத்தினர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் மக்களின் இழப்புக்கள் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.