மூன்று பிரதேசங்களில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வறட்சியால் பாதிப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக இதுவரை மூன்று பிரதேசங்களில் 13889 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று,துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் பதிவாகியுள்ளதுடன் வெலிஓயா,ஒட்டுசுடுசுட்டான்,மாந்தை கிழக்கு பிரதேசங்களில் விபரங்கள் திரட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
அதன் படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1967 குடும்பங்களை சேர்ந்த 6296 பேரும்,கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 10ஆயிரத்தி 799 குடும்பங்களை சேர்ந்த 33ஆயிரத்தி 797 மக்களும்,துணுக்காய் பிரதேசத்தில் 1123 குடும்பங்களை சேர்ந்த 6ஆயிரத்தி 426 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.
கரைதுறைப்பற்று,மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாட இடங்களுக்கு பிரதேச சபை ஊடாக குடி தண்ணீரினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.