மன்னாரில் பீடிஇலைகளுடன் மூவர் கைது!

breaking
கற்பிடி பிரதேசம் மற்றும் மன்னார் தால்பாடு கடற் பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆயிரத்து 638 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கற்பிடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயிரத்து 160 கிலோகிராம் பீடி இலைகள் 35 பொதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், மன்னார் தால்பாடு கடற் பிரதேசத்தில் 478 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.